districts

img

பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டு கேட்க மட்டும் வரும் பிரதமர்

மயிலாடுதுறை, மார்ச் 4- தங்களுடைய பதவி நாற்காலி யை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி; தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மயிலாடுதுறையில் திங்களன்று  (மார்ச் 4) நடைபெற்ற அரசு விழா வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறப்பு விழா மற்றும் மயிலாடு துறை, திருவாரூர் மற்றும் நாகப் பட்டினம் மாவட்டங்களில் முடி வுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி, ஒன்றரை ஆண்டுக் குள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தைத் திறந்து வைப்பதில் கூடு தல் பெருமை. புது மாவட்டங்கள் அறிவிப்பது பெரிது இல்லை, அதற் கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுதான் மிகமிக முக்கியமானது.

திருவோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திரு வோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய வருவாய் வட்டம் திங்கள் முதல் செய லாக்கத்திற்கு வருகிறது. 

இணையவழி பட்டா மாறுதல்
“நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” என்ற ஒரு மிக  முக்கியமான திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறேன்.  கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிய வந்தது. அதை எளிமையாக்குவதுதான் இந்த புரட்சிகரமான திட்டம்! தமிழ்நாடு வருவாய்த்துறை வர லாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்கு வது இதுதான் முதல்முறை! காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பார தியார் பாடினார். அதைக் கணினி  மூலமாக உறுதி செய்கின்ற திட்டம்இது!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ஒரு  ‘டெல்டாகாரன்’ என்ற உணர்வு டன் இந்த விழாவில் நான் திட்டப் பணிகளை தொடங்கி வைத்திருக் கிறேன்” என்று கூறினார்.

தேர்தல் நேரத்தில் முகம் காட்டும் மோடி
தேர்தலுக்காக – தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தைக் காட்டுகிறவர்கள் நாங்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்று அவசியமில்லை. உங்க ளுக்கே தெரியும். இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறா ர்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி இருக்கிறார் பாரதப் பிர தமர். வரட்டும். அதை வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. தமிழ் நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கின்ற மிக மிக நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றிக்கொண்டு வரட்டும்.

அப்படி இல்லாமல், தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணமும், ஓட்டும் மட்டும் போதும் என்று வரு கிறார்கள்! நாம் கேட்பது என்ன? சமீபத்தில், இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர் கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 37 ஆயி ரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வந்தாரா? இல்லை! ஒரு ரூபாய் கூட, ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்க வில்லை!

பதவி நாற்காலியை காப்பாற்றுவதே குறிக்கோள்
தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால், தங்களுடைய பதவி நாற் காலியை காப்பாற்றிக் கொள்வ தற்கு மட்டும் ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவர் களை பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்று அழுத்தந்திருத்த மாக  சொல்ல விரும்புகிறேன்.

தமிழக அரசின் பக்கம் தான்
தமிழ்நாட்டு உரிமைகளுக்காக வும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காகவும் பாடுபட்டுக் கொண்டி ருக்கும் நமது அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்! நிற்பார்கள்! நிற்பார்கள்.